எதிர்வரும் 11.10.25 சனி அன்று Loppemarked நடைபெறவிருப்பதால் உங்கள் சிற்றுந்துகளை வழமையான தரிப்பிடத்தில் தரிக்கமுடியாதென்பதை அறியத்தருகிறோம்.
வகுப்புகள் யாவும் வழமைபோல் நடைபெறும்.
எதிர்வரும் சனிக்கிழமை 27.09.25 அன்று நவராத்திரி விழா நடைபெறவுள்ளது. மாணவர், பெற்றோர், ஆசிரியர் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க வருக வருக என்று அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: 11.30 மணி.
எதிர்வரும் 13.09.25 சனி அன்று நடைபெறும் வகுப்பறைச் சந்திப்புகள்.
ஆண்டு 4: 09.45 – 10.10
ஆண்டு 5: 10.15 – 10.40
ஆண்டு 6: 11.10 – 10.35
ஆண்டு 7: 10.35 – 12.00
அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவச் செல்வங்களது கல்வியை மேலும் வளர்ச்சியடைய வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்படுவதே வகுப்பறைச் சந்திப்பு. எனவே உங்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விடயங்களை வகுப்பாசிரியருடன் கலந்துரையாட ஏற்படுத்திக்கொள்ளும் இக்கூட்டத்துக்குத் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் சனிக்கிழமை 06.09.2025 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும்.
விடயங்கள்: பாடசாலை விதிகள்,பாடநூல்கள்,ஆண்டுத்திட்டம்,அன்னை தமிழ்முற்றப் போட்டிகள்,அறிவாடல் போட்டி, வகுப்பறைச்சந்திப்பு,சிற்றுண்டிச்சாலை.
நேரம்: 11:15 – 12.00.
பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
திருக்குறள் ஒப்பித்தல்
ஆண்டு 4 முதல் 10 வரையான மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்
வளாகங்களில் நடாத்தப்படும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள், தேசிய ரீதியாக நடாத்தப்படும் போட்டியில் பங்குகொள்ள தகுதி பெறுவர்.
போட்டிகளில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் குடும்பப் பெயர் மற்றும் வளாகத்தின் பெயரை போட்டியில் பங்குபெறும்போது பயன்படுத்தக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.விரும்பின் முதற்பெயரை மட்டும் பயன்படுத்த முடியும்.
இப்போட்டிகள் இடம் பெறும் காலம், நேரம் தொடர்பான விபரங்கள் :
25.10.2025 ,26.10.2025(தேவையேற்படின் மாற்றம் செய்யப்படும்)
அந்தந்த வகுப்புகளுக்கான பேச்சுப்பகுதி மற்றும் திருக்குறள்கள் இணைக்கப்பட்டுள்ளது.
கீழே காணும் இணைப்பை அழுத்தி பிறந்த ஆண்டின் அடிப்படையில் குறளை தரவிறக்கம் செய்யவும்.
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2026/kural/2016.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2026/kural/2015.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2026/kural/2014.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2026/kural/2013.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2026/kural/2012.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2026/kural/2011.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2026/kural/2010.pdf
மழலையர் முற்றம்.
வளர்ந்து வரும் எமது மழலைகளை தமிழ் மொழியுடன் இணைக்கும் முயற்சியை, நோர்வேயில் பிறந்து வளர்ந்த இளையோர் முன்னின்று செயற்படுத்தவுள்ளனர்.
பாடசாலை ஆரம்பிக்காத மழலைகள் சிறுகதை சொல்ல அல்லது சிறுவர் பாடலை தமிழில் பாடும் வகையில் களம் அமைத்துக் கொடுக்கப்படும். போட்டியாக இல்லாது நேரடி மேடைநிகழ்வாகவும், சமகாலத்தில் வெளிமாவட்டத்தில் இருக்கும் மழலையர் இணையத்திலும் (Teams) பங்குபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நோர்வேயில் பரந்து வாழும் தமிழ் மொழி பேசும் அனைத்து மழலைககளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியும்.
மழலையர் முற்றத்தில் கலந்துகொள்ள 2020 / 2021 / 2022
பிறந்த ஆண் / பெண் மழலையர் வரவேற்கப்படுகிறனர்.
இடம் பெறும் காலம் : 11.10.2025, நேரம்: 13.00 மணி.