மாவீரர் நினைவாக நடத்தப்படும் ஓவியப்போட்டி. 2025
• ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 1மணிநேரம் வழங்கப்படும்.
• பாடசாலை நடைபெறும்போது வகுப்பு நேரத்தில் போட்டி நடைபெறும்.
• ஓவியத்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.
• வரையப்போகும் ஓவியத்தை வீட்டில் பயிற்சி செய்துகொள்ளலாம்.
• பயிற்சி செய்த ஓவியத்தாள்.போட்டி நடைபெறும்போது வகுப்பறைக்குள் கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது.
• மாணவர்களுக்கான சுட்டிலங்கங்களை வளாகங்கள் போட்டித்தாளின் பின்புறத்தில் எழுதிவிடுதல் வேண்டும்.
• ஓவியத்தாளை முழுமையாகப் பயன்படுத்துதல் வேண்டும். (வரைந்து, வர்ணம் தீட்டியிருத்தல் வேண்டும்)
• ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றை மட்டுமே போட்டியாளர்கள் தெரிவு செய்து வரைந்து, வர்ணம்தீட்டுதல் வேண்டும்.
• வளாகங்களின் விருப்பிற்கமைவாக போட்டிகள் (5ம்,6ம் ) (7ம்,8ம்) (9ம்,10ம்) (11ம்,12ம்) வகுப்பு என நான்கு பிரிவுகளாக நடைபெறும்.
போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளும் பிரிவுகளும்.
பிரிவு 1 (5ம்,6ம் வகுப்பு )
(1) தமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று அல்லது
(2) மாவீரர் துயிலுமில்லம்
பிரிவு 2 (7ம்,8ம் வகுப்பு )
(1) மக்களின் அகதிமுகாம் வாழ்க்கை அல்லது
(2) மாவீரர் நாளில் தாயகத்தில் ஏற்றப்படும் பொதுச்சடர் காட்சி
பிரிவு 3 (9ம்,10ம் வகுப்பு )
(1) முள்ளிவாய்க்கால் பேரவலம் அல்லது
(2) மக்களின் இடப்பெயர்வு காட்சிகள்
பிரிவு 4(11ம்,12ம் வகுப்பு )
(1)போர்க்கால மருத்துவ முகாம் காட்சிகள் அல்லது
எதிர்வரும் 18.10.25 சனி அன்று நடைபெறும் வகுப்பறைச் சந்திப்புகள்.
ஆண்டு 1: 09.45 – 10.10
ஆண்டு 2 10.15 – 10.40
ஆண்டு 3: 11.10 – 111.35
சிறுவர் நிலை: 11.35 – 12.00
அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவர்களின் கல்வியை மேலும் வளர்ச்சியடைய வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்படுவதே வகுப்பறைச் சந்திப்பு. எனவே உங்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விடயங்களை வகுப்பாசிரியருடன் கலந்துரையாட ஏற்படுத்திக்கொள்ளும் இக்கூட்டத்துக்குத் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 11.10.25 சனி அன்று Loppemarked நடைபெறவிருப்பதால் உங்கள் சிற்றுந்துகளை வழமையான தரிப்பிடத்தில் தரிக்கமுடியாதென்பதை அறியத்தருகிறோம்.
வகுப்புகள் யாவும் வழமைபோல் நடைபெறும்.
எதிர்வரும் சனிக்கிழமை 27.09.25 அன்று நவராத்திரி விழா நடைபெறவுள்ளது. மாணவர், பெற்றோர், ஆசிரியர் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க வருக வருக என்று அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: 11.30 மணி.
எதிர்வரும் 13.09.25 சனி அன்று நடைபெறும் வகுப்பறைச் சந்திப்புகள்.
ஆண்டு 4: 09.45 – 10.10
ஆண்டு 5: 10.15 – 10.40
ஆண்டு 6: 11.10 – 10.35
ஆண்டு 7: 10.35 – 12.00
அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவச் செல்வங்களது கல்வியை மேலும் வளர்ச்சியடைய வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்படுவதே வகுப்பறைச் சந்திப்பு. எனவே உங்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விடயங்களை வகுப்பாசிரியருடன் கலந்துரையாட ஏற்படுத்திக்கொள்ளும் இக்கூட்டத்துக்குத் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.