நடைபெறும் காலம் : 15.02.25
நேரம் : வழமையான வகுப்பு நேரங்களில் நடைபெறும்.
ஓவியப் போட்டி
1 ஆம் ஆண்டிலிருந்து 10 ஆம் ஆண்டு வரையானமாணவர்கள் தாம் விரும்பும் ஓவியத்தை வரையலாம்.
உறுப்பெழுத்துப்போட்டி
1 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆம் ஆண்டு வரையானமாணவர்களுக்கு எம்மால் வழங்கப்படும் சொல்லியத்தையோ அன்றி சொற்றொடரையோ பார்த்து எழுதுதல் வேண்டும்.
கட்டுரைப்போட்டி
5ஆம் ஆண்டிலிருந்து 10 ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறும்.
மாணவர்கள் கட்டுரை எழுதுவதற்காக மூன்று வகையான கட்டுரைகள் வழங்கப்படும். அவற்றில் ஏதாவது ஒன்றினை மாணவர்கள் எழுதவேண்டும்.
மாணவர்கள் இலகுவாக எழுதுவதற்கும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் கட்டுரையின் அம்சங்களுக்கேற்ற குறிப்புகள் வழங்கப்படும். அவற்றைப் பயன்படுத்தி கட்டுரை எழுதலாம்.
கட்டுரை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு
5,6 ஆம் ஆண்டு : 60 -75 சொற்கள்
7, 8 ஆம் ஆண்டு : 90 சொற்கள்
9,10 ஆம் ஆண்டு : 125 சொற்கள்
எதிர்வரும் சனிக்கிழமை 11.01.2025 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும்.
விடயங்கள்: தமிழர் திருநாள் 2025, அறிவுமுற்றப் போட்டிகள்.
நேரம்: 11:15 – 12.00.
பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
மாணவர்களுக்கான போட்டிகள் தொடர்பான விவரங்கள் வருமாறு:
• சிறுவர் பிரிவு – கதை சொல்லும் போட்டி ( 2019 பிறந்தோர்).
• ஆண்டு 1 முதல் 7 வரையான மாணவர்களுக்கான பேச்சுக்கள் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்.
• ஆண்டு 4 முதல் 10 வரையான மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்.
வளாகங்களில் நடாத்தப்படும்.
சிறுவர் பிரிவு – கதைசொல்லும் போட்டி (2019), பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி என்பனவற்றில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள், தேசிய ரீதியாக நடாத்தப்படும் போட்டியில் பங்குகொள்ள தகுதி பெறுவர்.
போட்டிகளில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் குடும்பப் பெயர் மற்றும் வளாகத்தின் பெயரை போட்டியில் பங்குபெறும்போது பயன்படுத்தக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.விரும்பின் முதற்பெயரை மட்டும் பயன்படுத்த முடியும்.
இப்போட்டிகள் இடம் பெறும் காலம், நேரம் தொடர்பான விபரங்கள் :
15.03.2025-16.03.2025
29.03.2025-30.03.2025
(தேவையேற்படின் மாற்றம் செய்யப்படும்)
அந்தந்த வகுப்புகளுக்கான பேச்சுப்பகுதி மற்றும் திருக்குறள்கள் இணைக்கப்பட்டுள்ளது.
கீழே காணும் இணைப்பை அழுத்தி பிறந்த ஆண்டின் அடிப்படையில் பேச்சு அல்லது குறளை தரவிறக்கம் செய்யவும்.
பேச்சு 2025
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/tale/tale_2018.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/tale/tale_2017.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/tale/tale_2016.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/tale/tale_2015.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/tale/tale_2014.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/tale/tale_2013.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/tale/tale_2012.pdf
திருக்குறள் ஒப்பித்தல் 2025
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/kural/2015.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/kural/2014.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/kural/2013.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/kural/2012.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/kural/2011.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/kural/2010.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2025/kural/2009.pdf
நன்றி –
இவ்வண்,
அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழு 2024
மாவீரர் நினைவாக நடத்தப்படும் ஓவியப்போட்டி. 2024
• ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 1மணிநேரம் வழங்கப்படும்.
• பாடசாலை நடைபெறும்போது வகுப்பு நேரத்தில் போட்டி நடைபெறும்.
• ஓவியத்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.
• வரையப்போகும் ஓவியத்தை வீட்டில் பயிற்சி செய்துகொள்ளலாம்.
• பயிற்சி செய்த ஓவியத்தாள்.போட்டி நடைபெறும்போது வகுப்பறைக்குள் கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது.
• மாணவர்களுக்கான சுட்டிலங்கங்களை வளாகங்கள் போட்டித்தாளின் பின்புறத்தில் எழுதிவிடுதல் வேண்டும்.
• ஓவியத்தாளை முழுமையாகப் பயன்படுத்துதல் வேண்டும். (வரைந்து, வர்ணம் தீட்டியிருத்தல் வேண்டும்)
• ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றை மட்டுமே போட்டியாளர்கள் தெரிவு செய்து வரைந்து, வர்ணம்தீட்டுதல் வேண்டும்.
• வளாகங்களின் விருப்பிற்கமைவாக போட்டிகள் (5ம்;,6ம் ) (7ம்,8ம்) (9ம்,10ம்) (11ம்,12ம்) வகுப்பு என நான்கு பிரிவுகளாக நடைபெறும்.
போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளும் பிரிவுகளும்.
பிரிவு 1 (5ம்,6ம் வகுப்பு )
(1) தமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று அல்லது
(2) நடுகல் வழிபாடு
பிரிவு 2 (7ம்,8ம் வகுப்பு )
(1) தமிழீழ காவல்துறை அல்லது
(2) மாவீரர் துயிலுமில்ல முகப்பு
பிரிவு 3 (9ம்,10ம் வகுப்பு )
(1) முள்ளிவாய்க்கால் பேரவலம் அல்லது
(2) நல்லூரில் அமைந்திருந்த திலீபனின் நினைவுத்தூபி.
எதிர்வரும் 02.11.24சனி அன்று நடைபெறும் வகுப்பறைச் சந்திப்புகள்.
தொடக்க நிலை: 11.15 – 11.40
சிறுவர் நிலை: 11.45 – 12.10
அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவச் செல்வங்களது கல்வியை மேலும் வளர்ச்சியடைய வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்படுவதே வகுப்பறைச் சந்திப்பு. எனவே உங்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விடயங்களை வகுப்பாசிரியருடன் கலந்துரையாட ஏற்படுத்திக்கொள்ளும் இக்கூட்டத்துக்குத் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் சனிக்கிழமை 19.10.24 அன்று நவராத்திரி விழா நடைபெறவுள்ளது. மாணவர், பெற்றோர், ஆசிரியர் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க வருக வருக என்று அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: 11.30 மணி.