மாணவர்களுக்கான போட்டிகள் தொடர்பான விவரங்கள் வருமாறு:
• சிறுவர் பிரிவு – கதை சொல்லும் போட்டி ( 2018 பிறந்தோர்).
• ஆண்டு 1 முதல் 7 வரையான மாணவர்களுக்கான பேச்சுக்கள் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்.
• ஆண்டு 4 முதல் 10 வரையான மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்.
வளாகங்களில் நடாத்தப்படும்.
சிறுவர் பிரிவு – கதைசொல்லும் போட்டி (2018), பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி என்பனவற்றில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள், தேசிய ரீதியாக நடாத்தப்படும் போட்டியில் பங்குகொள்ள தகுதி பெறுவர்.
போட்டிகளில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் குடும்பப் பெயர் மற்றும் வளாகத்தின் பெயரை போட்டியில் பங்குபெறும்போது பயன்படுத்தக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இப்போட்டிகள் இடம் பெறும் காலம், நேரம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
அந்தந்த வகுப்புகளுக்கான பேச்சுப்பகுதி மற்றும் திருக்குறள்கள் இணைக்கப்பட்டுள்ளது.
கீழே காணும் இணைப்பை அழுத்தி பிறந்த ஆண்டின் அடிப்படையில் பேச்சு அல்லது குறளை தரவிறக்கம் செய்யவும்.
பேச்சு 2024
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/tale/tale_2017.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/tale/tale_2016.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/tale/tale_2015.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/tale/tale_2014.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/tale/tale_2013.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/tale/tale_2012.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/tale/tale_2011.pdf
திருக்குறள் ஒப்பித்தல் 2024
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/kural/2014.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/kural/2013.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/kural/2012.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/kural/2011.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/kural/2010.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/kural/2009.pdf
https://annai.no/wp-content/uploads/annai_muttram_2024/kural/2008.pdf
மாவீரர் நினைவாக நடத்தப்படும் ஓவியப்போட்டி. 2023
• ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 1மணிநேரம் வழங்கப்படும்.
• பாடசாலை நடைபெறும்போது வகுப்பு நேரத்தில் போட்டி நடைபெறும்.
• ஓவியத்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.
• வரையப்போகும் ஓவியத்தை வீட்டில் பயிற்சி செய்துகொள்ளலாம்.
• பயிற்சி செய்த ஓவியத்தாள்.போட்டி நடைபெறும்போது வகுப்பறைக்குள் கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது.
• மாணவர்களுக்கான சுட்டிலங்கங்களை வளாகங்கள் போட்டித்தாளின் பின்புறத்தில் எழுதிவிடுதல் வேண்டும்.
• ஓவியத்தாளை முழுமையாகப் பயன்படுத்துதல் வேண்டும். (வரைந்து, வர்ணம் தீட்டியிருத்தல் வேண்டும்)
• ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றை மட்டுமே போட்டியாளர்கள் தெரிவு செய்து வரைந்து, வர்ணம்தீட்டுதல் வேண்டும்.
• வளாகங்களின் விருப்பிற்கமைவாக போட்டிகள் (5ம்;,6ம் ) (7ம்,8ம்) (9ம்,10ம்) (11ம்,12ம்) வகுப்பு என நான்கு பிரிவுகளாக நடைபெறும்.
போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளும் பிரிவுகளும்.
பிரிவு 1 (5ம்,6ம் வகுப்பு )
(1) தமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று அல்லது
(2) நடுகல் வழிபாடு
பிரிவு 2 (7ம்,8ம் வகுப்பு )
(1) மாவீரர் துயிலுமில்லம் அல்லது
(2) தமிழீழ வரைபடம். (தமிழரின் பூர்வீக பிரதேசங்களின பெயர்களுடன்)
பிரிவு 3 (9ம்,10ம் வகுப்பு )
(1) நல்லூரில் அமைந்திருந்த தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அல்லது
(2) ஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்.
பிரிவு 4 (11ம்,12ம் வகுப்பு )
(1) முள்ளிவாய்க்கால் பேரவலம் அல்லது
(2) தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பிரிவுகளான தரை,கடல்,வான்,கரும்புலி,வேவுப்புலி
எதிர்வரும் 28.10.23 சனி அன்று நடைபெறும் வகுப்பறைச் சந்திப்பு.
ஆண்டு 10: 11.10 – 11.40.
அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவச் செல்வங்களது கல்வியை மேலும் வளர்ச்சியடைய வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்படுவதே வகுப்பறைச் சந்திப்பு. எனவே உங்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விடயங்களை வகுப்பாசிரியருடன் கலந்துரையாட ஏற்படுத்திக்கொள்ளும் இக்கூட்டத்துக்குத் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் சனிக்கிழமை 21.10.23 அன்று நவராத்திரி ஆராதனை நடைபெறவுள்ளது. மாணவர், பெற்றோர், ஆசிரியர் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க வருக வருக என்று அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: 11.45 மணி.
எதிர்வரும் 14.10.23 சனி அன்று நடைபெறும் வகுப்பறைச் சந்திப்புகள்.
மழலையர்: 09.45 – 10.10
சிறுவர்: 10.15 – 10.40
ஆண்டு 1: 11.05- -11.30
ஆண்டு 2: 11.35 – 12.00
அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவச் செல்வங்களது கல்வியை மேலும் வளர்ச்சியடைய வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்படுவதே வகுப்பறைச் சந்திப்பு. எனவே உங்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விடயங்களை வகுப்பாசிரியருடன் கலந்துரையாட ஏற்படுத்திக்கொள்ளும் இக்கூட்டத்துக்குத் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 14.10.23 சனி அன்று Loppemarked நடைபெறவிருப்பதால் உங்கள் சிற்றுந்துகளை வழமையான தரிப்பிடத்தில் தரிக்கமுடியாதென்பதை அறியத்தருகிறோம்.
வகுப்புகள் யாவும் வழமைபோல் நடைபெறும்.