அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் வளாகத்தின் வருடாந்த ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 27.04.2024 சனியன்று 15.00 – 18.00 மணி வரை நேரடியாகவும் இணையமுற்றத்திலும் இடம் பெறுவதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
14.00 மணிக்கு வரவுப்பதிவு செய்யப்படும். அங்கத்தவர்கள் 14:00 மணிக்கு வருகைதர வேண்டும்.
குறிப்பு:
மேலும் 15.03.24 வெள்ளியன்று எமது சட்டவாளருடன் எமது வளாக சார்பில் சில நிருவாக உறுப்பினர்களும் எதிர்த்தரப்பு பெற்றோர் ஒருவரின் சட்டவாளர்களுடன் வருகை தந்திருந்த சில பெற்றோருடன் சந்திப்பை மேற்கொண்ட போது குறிப்பிட்ட பெற்றோர் தனது சட்டத்தரணியூடாக பொதுவான நோர்வேயியர்களை வைத்து ஆண்டுக்கூட்டத்தை நடாத்த வேண்டுமென்றும், கூட்ட நடத்துநர், வாக்குகளை எண்ணும் கண்காணிப்பாளர் ஆகியோர் வெளியிலிருந்து பொதுவான நோர்வேயியராக இருக்க வேண்டுமென்றும் கோரிக்கையை முன்வைத்தனர். எமது சட்டத்தரணி இவற்றை ஆண்டுக் கூட்டத்தினை நடாத்துவதற்கான இவர்களின் கருத்தாக எடுத்துக் கொள்வதாகக் கூறினார். இதற்கமைவாக நாம் பல நோர்வையிய அமைப்புக்களையும்,வேறு சிலரையும் பயன்படுத்தி ஆண்டுக்கூட்டத்தை நடாத்துவதற்கு உதவி செய்ய கேட்டுள்ளோம்.
றொம்மன் வளாக ஆண்டுக்கூட்டம் யாப்பின் விதிகளுக்கு அமைவாகவும் அனைத்து அங்கத்தவர்களையும் இணைத்து நடாத்தவுள்ளோம்.
நன்றி –
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் நிருவாகம் 2024
ஆண்டுக் கூட்டத்திற்கு தமது வருகையை முன் பதிவின் மூலம் உறுதிப்படுத்த!
ஆண்டுக் கூட்டத்திற்கு தமது வருகையை முன் பதிவின் மூலம் உறுதிப்படுத்த இப்படிவத்தை நிரப்பி அனுப்புவதன் மூலம் சரியான மின்னஞ்சலில் கூட்ட இணைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ் விண்ணப்பப்படிவம் 09.03.2024ம் திகதி 10:00 மணிக்கு முன்னர் நிரப்பி அனுப்பப்படல் வேண்டும். இவ் விண்ணப்பபடிவத்தை கட்டாயம் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. இது தங்களின் சரியான மின்னஞ்சல் முகவரியை பதிவிடுவதற்கும், தங்கள் வரவுப் பதிவை துரிதமாக்குவதற்குமேயாகும்.
Dette skjemaet er ment som en hjelp til deg. For at du skal få lenken til riktig e-postadresse og for at registreringen skal gå raskt, kan du fylle ut dette skjemaet på forhånd. Det vil sikre at du får tilgang til lenken for riktig e-postadresse som du bruker. Vennligst fyll ut skjemaet før 09.03.2024 kl. 10:00. Du trenger ikke å fylle ut dette skjemaet dersom du allerede har alt klart: møtelenke, brukernavn og passord for å komme til årsmøte.
ஆண்டுக் கூட்டத்திற்கு தமது வருகையை முன் பதிவின் மூலம் உறுதிப்படுத்த!
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் வளாகத்தின் வருடாந்த ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 09.03 2024 சனியன்று 14:00-16:30 மணிக்கு இணையமுற்றத்தில் இடம் பெறும்.
கூட்ட நிகழ்ச்சி நிரல்:
– அகவணக்கம்
– கூட்ட அழைப்பையும், முறையையும் ஏற்றுக்கொள்ளல்.
– கூட்ட நடத்துநர் ஏற்றுக்கொள்ளல்
– கூட்ட அறிக்கை எழுதுநர்
– செயற்பாட்டு அறிக்கை
– கணக்கறிக்கை,
– கணக்காய்வாளர்
– பாதீடு
– நிருவாகத் தெரிவு
– தெரிவுக்குழு தெரிவு
– பரிந்துரைகள்
1) கல்வி/ கலை
– கணனி மயப்படுத்தல்
(25 iPad )
2) உள் வந்த பரிந்துரைகள்
செயற்பாட்டு அறிக்கை, கணக்கறிக்கை, உள் வந்த பரிந்துரைகள்( Årsrapport, Regnskap, Innkommende forsalg)
andukudam_selpadu_kanaku_parnthuraikal_final_v2.pdf (annai.no)
கடந்த 17.02.2024 அன்று எம்மால் ஒழுங்குசெய்யப்பட்ட அங்கத்தவர் தகவல் கூட்டத்தில் (பெற்றோர் கூட்டத்தில்) நாம் அறிவித்ததுபோல் யாப்பு விதிமுறைகளுக்கமைய நிர்வாகம் பரிந்துரைக்கும் நிர்வாகத் தெரிவுக்குழுவினை பெற்றோரின் ஒப்புதல் பெறும் பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் நேற்றையதினம்(03.03.
2024) மிகச் சிறப்பாக இணையவழியில் (Teamsஇல்) நடைபெற்றது. இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து நிற்கின்றோம்.
*கூட்டத்தில் பங்குகொண்ட அங்கத்தவர் மொத்த எண்ணிக்கை:* 84
*நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவல்:*
1. விருந்தினர் Guest போன்று மற்றும் தங்கள் தனிப்பட்ட மின்னஞ்சலிலிருந்து இணைந்திருப்பவர்கள் இதிலிருந்து நீங்கி, தங்கள் பிள்ளைகளின் பெயரில் வழங்கப்பட்ட மின்னஞ்சலிலிருந்து வரவும்.
2. யாராவது ஏதாவது கருத்துக்கூற விரும்பினால் அவர்கள் தங்கள் கைகளை உயர்த்துவது போன்று காண்பித்தால் அவர்களுக்குரிய ஒலிவாங்கியும் காணொளியும் திறக்கப்படும்.
3. யாராவது ஏதாவது கூறவிரும்பினால் chat பகுதியில் தகவல் பரிமாற்றம் செய்யலாம்.
*ஒப்புதல் எடுக்கப்பட்ட விடயங்கள்.*
1. கூட்ட அழைப்புக்கான ஒப்புதல். (மறுப்புத் தெரிவித்தவர்கள் ஐவர் மட்டுமே)
2. நிர்வாகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாகத்தெரிவுக்குழு மூவரின் பெயர்களும் கூறப்பட்டு அங்கத்தவர்கள் முன்னிலையில் ஒப்புதல் பெறப்பட்டது (55பேர் ஒப்புதலளித்துள்ளனர்).
அனைத்து தெரிவுகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகளையும் அனைத்து பெற்றோர் அங்கத்தவர்களும் இணையவழியில் நேரடியாக எல்லோரும் காணக்கூடியதாகவே இருந்தது.
இணையவழிக்கூட்டம் என்பதனால் கூட்டம் ஒளி மற்றும் ஒலிப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அத்துடன் பதிவிற்காக கூட்ட அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது.
19.02.2024 வரை எடுக்கப்பட்ட பதிவின்படி உறுப்பினர் உரிமை முழுமையாகப் பெற்ற அங்கத்தவர்கள் எண்ணிக்கை 286 எனவும் அதில் 72பேர் ( enkelt medlemmer) அதாவது 10,11,13ஆம் வகுப்புகளில் கல்விகற்கும் மாணவர்கள். இவர்களின் பெற்றோர்களுக்கு யாப்பின் படி வாக்குரிமை இல்லை.
பங்குகொண்டு சிறப்பித்தவர்கள் அனைவரும் றொம்மன் வளாகப் பெற்றோர்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றோம்.
கூட்டத்தில் பங்குகொண்டு ஒத்துழைப்புத் தந்த அனைத்து பெற்றோருக்கும் நன்றி.
இதே போன்று 09.03.2024 நடைபெறவிருக்கும் வருடாந்த ஆண்டுக்கூட்டத்திலும் முழுமையாக உறுப்பினர் உரிமைபெற்ற அனைவரும் கலந்து சிறந்த முறையில் நிர்வாகத்தெரிவினையும் நடாத்த ஒத்துழைப்புத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
*நடைபெற்ற நிர்வாகத் தெரிவுக்குழு தெரிவுக்கான பிரத்தியேக இணையவழி ஆண்டுக்கூட்டத்தில் சிலரால் இணைந்து கொள்ளமுடியாமல் போனதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆராய்ந்து பார்த்ததில் அவர்கள் நாம் இச்சந்திப்பிற்காக அனுப்பிய இணைப்பிற்குப் பதிலாக சோதனைக்காக அனுப்பிய Microsoft இணைப்பினை அழுத்திப் பார்த்தவண்ணம் இருந்துள்ளனர்.எனவே அடுத்து வரும் சந்திப்புகளில் இவ்வாறான தொழில்நுட்ப பாவனைத் தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு முயற்சி எடுப்போம்.
1) கூட்ட அழைப்பிற்கான இணைப்பினை பாடசாலையில் பதியப்பட்டுள்ள தங்களது மின்னஞ்சலுக்கும், viber குழுமத்துக்கும் அனுப்புதல்.
2) வளாகத்தால் உருவாக்கப்பட்ட Viber குழுமத்தில் இணைவதன் மூலம் தகவல்களை சரியாக பெறுதல்
3) கூட்டம் தொடங்குவதற்கு 60 மணித்துளிகளுக்கு முன் உள்ளே நுழைய சிரமமான வர்கள் தங்கள் இணைப்பும் கடவுச் சொல்லும் வேலை செய்வதை உறுதி செய்து கூட்டத்துக்கு உள்நுழைதல்.
ஒழுங்குமுறையில் அனைவரையும் இணைத்துச் சந்திப்பினைச் சிறப்பாக நடாத்துவோம்.
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் வளாகம்.
வணக்கம் பெற்றோர்களே!
வளாகத்தின் யாப்பு விதிமுறைகளுக்கமைய புதிய நிருவாக உறுப்பினர்கள் 09.03.24 ம் திகதி நடைபெறும் ஆண்டுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி ஏற்கனவே அறியத்தந்திருந்தோம். அதற்கமைய நிருவாகத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் அங்கத்தவர்கள் கீழ்வரும் விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி 05.03.24 புதன் 11:00 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
நன்றி
இவ்வண்ணம்
றொம்மன் நிருவாகம்