வணக்கம்!
வாராந்தத் தகவல் 14.12.2024 Ukasinfo 50-2024
சென்ற வாரம் நத்தார் விழா சிறப்பாக நடைபெறப் பாடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்குழு, தேநீர்ச்சாலைக்குழு மற்றும் அனைத்து பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டுகளும்.
கல்வி
14.12.2024 அரையாண்டுத் தேர்வு
1-5 ஆம் வகுப்பு:
வழமை போல் இரண்டு பகுதிகளும் வினாத்தாளில் நடைபெறும். பரீட்சை இடைவேளை இன்றி நடைபெறும்.
6-10 ஆம் வகுப்பு:
முதல் பகுதி இணையத்திலும், இரண்டாம் பகுதி (எழுத்து தேர்வு) வினாத்தாளில் நடத்தப்படும். மடிக்கணினி/Nettbrett அல்லது கைத்தொலைபேசி கொண்டு வர வேண்டும். பரீட்சை இடைவேளை இன்றி நடைபெறும்.
இடைவேளை உணவு:
ஆறாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் இருவர் இருவராக சென்று தேநீர்சாலையில் உணவு வாங்கிக் கொள்ளலாம்.
ஆறாம் வகுப்புக்கு கீழ்ப்பட்ட மாணவர்களின் உணவுவிற்கு பெற்றோர்கள் பொறுப்பு அவர்கள் வகுப்பறையில் 10:45 மணியளவில் கொடுக்கலாம்.
தேநீர்சாலை கீழ் மற்றும் மேல் இரண்டு கட்டிடத்திலும் செயல்பாட்டில் இருக்கும்.
21.12.2024 தவணை இறுதி நாள் , தேர்ச்சி அறிக்கை வழங்கப்படும்
வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் மேலதிக கற்கைநெறி வகுப்புகள் இவ்வாரம் முதல் 2024 ஆண்டு முடியும் வரை நடைபெற மாட்டாது. மீண்டும் 2025 தை மாதத்தில் இருந்து மேலதிக கற்க நெறி வகுப்புகள் தொடரும்.
நிதி 2024
Høst 2024 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால்,
எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no
தொலைபேசி 908 89 393
2024 ஆவணி மாதம் அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்ட அங்கத்துவபணம் பலர் செலுத்தவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது, செலுத்தாத அனைவருக்கும் KID மற்றும் கணக்கு எண் விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் விரைவில் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
18.01.2025 அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
18.01.2025 அன்னை வளாகங்கள் ஒன்று சேர்ந்து நடாத்தும் தமிழர் தைப்பொங்கல் விழாவிற்கு எங்கள் வளாகத்திற்கு நாடகம் கிடைத்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் கதைக்குப் பொருத்தமாக அமையும் வகையில் பெரிய கதாபாத்திரங்களுக்கு 10ம், 9ம், 8ம் வகுப்பு மாணவர்களையும் மற்றும் நாடகத்தில் வரும் சிறிய பிள்ளைகள் பாத்திரத்திற்கு 5ம் வகுப்பு மாணவர்களையும் உள்வாங்க உள்ளோம்.
நாடகத்தில் பங்கு கொள்ள விரும்பும் பிள்ளைகளின் பெயர் விபரங்களை உங்கள் வகுப்பு ஆசிரியருக்கு 12.12.24 வியாழக்கிழமைக்கு முன்பு கொடுக்கவும். 14.12.24 அன்று அரையாண்டு பரீட்சை முடிந்தபின் நாடகத்திற்கான கதாபாத்திர தேர்வுகள் பாடசாலையில் நடைபெறும்.
முக்கிய குறிப்பு:
நாடகத்தில் நடிக்க முன்வரும் மாணவர்கள், அவர்கள் ஏற்று நடிக்க இருக்கும் கதாபாத்திரங்கள் புலன் மொழித்திறன் அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள்.
அதாவது பிள்ளைகள் தமிழில் சரளமாகக் கதைக்கக் கூடியவராகவும், தமிழை நன்றாக வாசிக்கக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
நாடகம் பழக்கும் போது ஒரு பிள்ளை தொடர்ந்து இரண்டு தடவைகள் பயிற்சிக்கு வரவில்லை என்றால் அந்தப் பிள்ளை தொடர்ந்து அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தை இழந்து விடுவார்.
கூடிய பிள்ளைகள் விரும்பி நாடகத்தில் பங்குகொள்ள பெற்றோர்களாகிய நீங்களும் ஊக்கம் கொடுக்க வேண்டும்.
எமது வளாகம் ஒரு சிறந்த, தரமான நாடகத்தை வழங்க பெற்றோர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனைத் தருவீர்கள் என்று நம்புகிறோம்.
18.01.2024 தமிழர் திருநாள் அதாவது பொங்கல் விழாவிற்கான லோறன்ஸ்கூக் வளாகத்தின் பொறுப்புகள்.
-மண்டப அலங்காரம் பொருட்கள் ஏற்றுதல் கதிரை அடுக்குதல். வெள்ளிக்கிழமை மண்டப அலங்காரம் 18.30 மணிக்கு பொங்கல்விழா மண்டபத்திற்கு சமூகமளிக்கவேண்டும். மண்டபத்தில் வெள்ளி பிற்பகல் கதிரை அடுக்குதல், தோரணம் கட்ட கயிறு கட்டுதல், தோரணம் கட்டுதல் , மேடை அலங்காரத்திற்கு உதவிசெய்தல் போன்ற வேலைகள் இடம்பெறும். தமிழர் வள ஆலோசனை மையத்தில் இருந்து பொருட்கள் எற்றுவதற்க்கான உதவி.
-8 கிலோ பொங்கல் மற்றும் 8 கிலோ சுண்டல்.
ஆண்டுக்கூட்டம் 2025 - 15.02.2025 சனிக்கிழமை
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம். நேரம்: 09:45-12:00 (இ.வே.10:45-11:15)
ஆண்டுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் சார்பாக ஏதாவது விடையங்கள் கொண்டுவரவிரும்பின் எமக்கு 12.01.2025 இற்கு முன்னதாக மின்னஞ்சலினூடாக lorenskog.annai@gmail.com அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். வழங்கப்பட்ட நாளுக்கு முன்னதாக எமக்குக் கிடைக்கப்படும் விடையங்கள் மட்டுமே ஆண்டுக்கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் முழுமை பெற்ற அங்கத்தவராக இருத்தல் வேண்டும். நிகழ்ச்சிநிரல் பின்பு அனுப்பிவைக்கப்படும்.
குறிப்பு:
ஆண்டுக்கூட்டத்திலே அனைவரும் பங்கேற்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் தகைமைக்கு உரித்தானவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் மட்டுமே!
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
2025 ஆண்டுக்கூட்டத்தில் இடம்பெறவிருக்கும் தெரிவுகள்.
-2025-2027 இற்கான நிர்வாகம்
-நிர்வாகத் தெரிவுக்குழு
-கணக்காய்வாளர்
-விளையாட்டுப் போட்டிக்கான குழு
-விளையாட்டுப் போட்டிக்கான இல்லப்பொறுப்பாளர்கள்
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
18.01.2025 அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
15.02.2025 வருடாந்தப்பொதுக்கூட்டம் லோறஸ்கூக் வளாகம்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_50-2024 pdf