றொம்மன்

ஆசிரியர்களுக்கு எம்மால் வழங்கப்பட்ட கடிதத்தினை எமது அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பாதுகாவலர்கள் பார்வைக்கு முன்வைக்கின்றோம்.

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அங்கத்தவர்கள், அங்கத்தவர்களின் பெற்றோர்கள்/பாதுகாவலர்களுக்கு அன்பான வணக்கம்.

ஆசிரியர்களுக்கு எம்மால் வழங்கப்பட்ட கடிதத்தினை எமது அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பாதுகாவலர்கள் பார்வைக்கு முன்வைக்கின்றோம்.
வளாகத்தில் சில ஆசிரியர்களிடமிருந்து எமக்கு வழங்கப்பட்ட கடிதத்தினையும், எம்மால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிலையும் தவறான முறையில் சித்தரித்து, உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சிலர் பரப்பிவருவதாலும், இரகசியங்களைப் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பில் நாம் இருப்பதனால், ஆசிரியர்கள் எமக்கு வழங்கிய கடிதத்தினைத் தவிர்த்து, அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்ட கடிதத்தினை எமது அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பாதுகாவலர்கள் பார்வைக்கு முன்வைக்கின்றோம்.
இதனை றொம்மன் வளாகத்தின் நன்மைக்காகவும், வளாகத்தை நோக்கிய உண்மைக்குப் புறம்பான செய்திகளை மறுதலிப்பதற்காகவும் மட்டுமே நாம் வெளியிடுகின்றோம்.
"தமிழ் எங்கள் அடையாளம்"
இவ்வண்ணம்
நிர்வாகம் - றொம்மன் வளாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.