வணக்கம்!
வாராந்தத் தகவல் 08.03.2025 Ukasinfo 10-2025
மதிப்புக்குரிய பெற்றோர் அங்கத்தவர்களுக்கு வணக்கம்!
புதிய கல்வி ஆண்டுக்கான நிருவாக உறுப்பினர்களை உள்வாங்குவது தொடர்பாக 27.02.2025 அன்று அன்னை தலைமையின் ஏற்பாட்டில் லோறன்ஸ்கூக் வளாக பொறுப்பார், கல்விப்பொறுப்பாளர் தேவாம்பிகை உட்பட தெரிவுக் குழுவினருக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் லோறன்ஸ்கூக் வளாகத்தின் எதிர்கால நலன் சார்ந்து கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் லோறன்ஸ்கூக் வளாக நிருவாகத்தில் இருந்து மூன்று முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்கள் பணிக்காலம் முடிந்து வெளியேற இருப்பதால் அவர்களில் ஒருவரை தக்க வைத்துக்கொள்ள அன்னை தலைமையால் பரிந்துரைக்கப்பட்டது. அத்தோடு நிருவாகத்தில் குறைந்தபட்சம் இரு பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதால் ஒரு பெண் உறுப்பினரை சேர்ப்பதற்கான அவசியமும் விவாதிக்கப்பட்டது. இப்ப பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு லோரன்ஸ்கூக் வளாக நிருவாகத்தினர் ஆகிய நாமும் எமது வளாக நலம் சார்ந்து அன்னை தலைமையின் பரிந்துரைக்கு அமைய விண்ணப்ப காலத்தை எதிர்வரும் 09.03.2025 ஞாயிற்றுக்கிழமை வரை நீடித்துள்ளோம். valgkomite.lorenskog@annai.no
இவ்விடயம் பெற்றோராகிய உங்களுக்கு அறிய தருவது எமது தார்மீக கடமையாகும்.
புரிதலுக்கு நன்றி.
கல்வி
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும்.
சனிக்கிழமை 08.03.25 அன்று கதைசொல்லும் மற்றும் பேச்சுப் போட்டிகள் எங்கள் வளாகத்தில் நடைபெறும். சிறுவர் நிலை மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டி அவர்களின் வகுப்பில் 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.
பேச்சுப் போட்டி பாடசாலையின் மேல் கட்டிடத்தில் உள்ள கீழ் மண்டபத்தில் 1 ம் வகுப்பிற்கு 10.00 மணிக்கு ஆரம்பித்து தொடர்ந்து 2, 3, 4, 5, 6, 7ம் வகுப்பு வரை கிட்டத்தட்ட 14.00 மணி வரை நடைபெறும்.
ஒவ்வொரு வகுப்பும் தனித்தனியாக நடைபெறும். அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களும் அனுமதிக்கப்படுவர். பேச்சு போட்டிகள் முடிந்த பின்னர் எல்லா மாணவர்களுக்கும் ஒரு சிறிய பரிசு கொடுக்கப்படும். 1ம், 2ம், 3ம் நிலை பெற்றவர்கள் யார் என்று அறிவிக்கப்படும். அம் மூவரும் அன்னைத் தமிழ் முற்ற இறுதிப் போட்டியில் பங்கு கொள்வார்கள்.
கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
பாஸ்கரன் ஆசிரியரின் நாட்டுப்புற கலை வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தக் கலை வகுப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு அமைய முதலாம் வகுப்பு மாணவர்கள் உட்பட அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் உள்வாங்கப்படுவர். இதற்காக முன்பதிவு படிவம் ஊடாக மாணவர்களை பதிவு செய்து உள்வாங்கப்படும். நாட்டுப்புற கலை வகுப்புக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கான கட்டணம் முற்றிலும் இலவசம்.
மழலையர் மற்றும் சிறுவர் நிலை வகுப்பு மாணவர்களுக்கு இலவச கலை வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் தாம் விரும்பும் கலை வடிவத்தை (சங்கீதம், பரதநாட்டியம், freestyle) இலவசமாக கற்று அறிந்திட ஒரு அருமையான வாய்ப்பு. அத்துடன் வரும் வெள்ளிக்கிழமை 07.03. 2025 முதல் பரதநாட்டியம் மற்றும் சங்கீத கலை வகுப்புகளில் உள்ள அனைத்து (1ம் வகுப்பு முதல் மேல் வகுப்பு மாணவர்கள்) தாம் கற்றுக் கொள்ளும் கலையில் மேலும் சிறந்து தேர்ச்சி பெற எண்ணும் மாணவர்கள் ஆண்டு தோறும் சோதனையை பூர்த்தி செய்து டிப்ளமா பெற விரும்பும் மாணவர்கள் வெள்ளிக்கிழமையிலும் கூடுதலாக பாடம் கற்றுக் கொடுக்கப்படும் என்பதை மிகவும் மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பங்கு கொள்ள இருக்கும் மாணவர்கள் உங்கள் பதிவினை இதில் பதிவு செய்யவும்.
https://forms.office.com/e/08Ku6Ykz3K
நிதி 2024
Høst 2024 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no தொலைபேசி 908 89 393
செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
ஆண்டுக்கூட்டம் 15.03.2025
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம். நேரம்: 09:45-12:00 (இ.வே.10:45-11:15)
குறிப்பு:
ஆண்டுக்கூட்டத்திலே அனைவரும் பங்கேற்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் தகைமைக்கு உரித்தானவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் மட்டுமே!
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
08.03.2025 பேச்சு தெரிவு போட்டி
15.03.2025 வருடாந்தப்பொதுக்கூட்டம் லோறன்ஸ்கூக் வளாகம்
15.03.2025 அன்னைத் தமிழ் முற்றப் பேச்சுப் போட்டிகள்
23.03.2025 அன்னைத் தமிழ் முற்றப் கதை மற்றும் திருக்குறள் போட்டிகள்
03.05.2025 சித்திரை விழா / Eventyr dagen
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_10-2025 pdf