08.03.25 ம் திகதி சனிக்கிழமை 13:00 மணிக்கு கதை சொல்லும் போட்டி, பேச்சுப்போட்டி
என்பன 2 ம்மாடியில் இரண்டு மண்டபங்களில் நடைபெறும். போட்டிகள் நிறைவடைந்ததும் இப்போட்டிகளுக்கான பரிசளிப்புகளும், நடைபெற்று முடிந்த ஓவியப்போட்டி, சொல்வதெழுதுதற் போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.
அத்துடன் எதிர்வரும் 15.03.25 சனியன்று மதியம் 13.00 மணிக்கு தேசிய மட்டத்திலான பேச்சுப்போட்டிகள் 1-7 ம் வகுப்புகளுக்கு நடைபெறும்.
பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி என்பவற்றில் வளாகங்களில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள் தேசியமட்டத்தில் இடம்பெறும் இறுதிப்போட்டிகளில் பங்குகொள்வர்.
தேசிய மட்டத்தில் நடைபெறும் அன்னை தமிழ்முற்றப் போட்டிகளில் பேச்சுப்போட்டி 15.03.25 ம்திகதி 13:30 மணிக்கு நடைபெறும்.
சிறுவர் கதை சொல்லும் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி என்பன 23.03.25 ஞாயிற்றுக்கிழமை 11:00 மணிக்கு நடைபெறும்.